10/05/2018

சின்னச்சின்ன ஊடலில்



(எசப்பாட்டு வடிவத்தில் எழுதியது)
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

வண்ணமய வாழ்க்கையிலே
சண்டையிடும் என்னவளே...
என்னைநானும் தந்த பின்னே
இன்னும் என்ன வேண்டுமடி?

சின்னச்சின்ன ஊடலையும்
சண்டையாக்கும் என்னவரே
என்றும் உங்க அன்பு மட்டும்
இன்னும் இன்னும் வேண்டுமய்யா?

பாலைவனக் காசுலதான்
சேலையெல்லாம் வாங்கித்தந்தேன்
நகைப்போடு இருக்கத்தானே
நகையெல்லாம் வாங்கித்தந்தேன்

அய்யோ மச்சான் நிறுத்துங்க...
அம்புட்டய்யும் சொல்லாதீக...
அன்போடு மல்லிகைப்பூ
அந்தியில வாங்கி வாங்க....

அன்பு மனம் புரியாமல்
உன்னோடு சண்டையிட்டேன்
அன்பே நீயும் காத்துநில்லு
அத்தான் நானும் ஓடிவர்ரேன்..

No comments: