16/05/2018

புத்தகமெனும் குழந்தை



விதை தூவி கரு பதித்து
விளைவது குழந்தையெனில்
கரு பதித்து வரி ஆகி
வருவது நூலாகும்!

உணர்ச்சியின் மிகுதியிலே
உருவாகும் படைப்புகள்
உயிராய் வெளிவரவே
உள்ளத்தில் கிளர்ச்சி வரும்!

தாயின் வலி சொல்லும்
பிரசவ வேதனையை
நூலின் வரி சொல்லும்
புத்தகம் தந்து விடும்!

குழந்தையின் பெயரென்றும்
பிறந்தவுடன் முடிவாகும்!
நூலின் பெயரென்றும்
பிறக்கும்முன் முடிவாகும்!

✍️செ. இராசா

No comments: