24/05/2018

கவிச்சரம் ---பெண்ணுரிமை-----கல்வி



தமிழ்த்தாய் வாழ்த்து
********************
அறிஞரும் பொறிஞரும்
அறிவில் சிறந்தோரும்
கவிதை புனைந்திட
கருவிதை வழங்கிடும்
தமிழின் அன்னையை
தமிழ்கொண்டே வணங்குகின்றேன்!

💐💐💐🙏🙏🙏💐💐💐

கவிச்சரத் தலைமை வணக்கம்
*****************************
கவி தா என்று அழைத்தாலே
கவி தரும் திறமை படைத்தவரே!
கவிக்கரு எதுவென இருந்தாலும்
கவிகள் புனைவதில் வல்லவரே!
கவிஞர்கள் பயணிக்கும் பட்டறையில்
கவிதைகள் கதைகள் படைப்பவரே!

கவிச்சரத் தலைமை ஏற்றிருக்கும்
கவிதாராசா கவிஞரே- நல்ல
கவியால் உலகை வென்றிடவே
கவிதாவின் ராசாநான் வாழ்த்துகின்றேன்!

💐💐💐🙏🙏🙏💐💐💐

அவை வணக்கம்
****************
சுயநலம் எதுவும் இல்லாமல்
பொதுநலம் ஒன்றே குறிக்கோளாய்
இணையத்தில் மட்டும் இல்லாமல்
இலக்கியம் போற்றிடும் பேரவையாய்
விழுதுகள் பரப்பிடும் அவையினை நான்
விழுந்து வணங்கி போற்றுகின்றேன்

🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏

பெண்ணுரிமை
**************
உனக்கு உரிமை வேண்டுமென்று
இனியும் உலகைக் கேட்காதே!

நீயே எழுந்து தலைநிமிர்ந்து
நீதியின் கதவினைத் தட்டிடுவாய்!

வளர்ச்சியைத் தடுத்திடும் களைகளை நீ
வேரோடு புடுங்கி எறிந்திடுவாய்!

குறுக்கே யாரும் வந்துநின்றால்
குடலை உருவிட துணிந்திடுவாய்!

🧕👮🏻‍♀️👮🏻‍♂️👷‍♀️🧕👮🏻‍♀️👮🏻‍♂️👷‍♀️🧕👮🏻‍♀️👮🏻‍♂️👷‍♀️

கல்வி
******
உலகைக் கையினில் கொண்டுவர-நல்ல
உயர்நிலைக் கல்விகள் பயின்றிடுவாய்!
அறிவில்லா அரசியல் மூடர்களை-நல்ல
அறிவால் நீயும் அரிந்திடுவாய்!

நிலாச் சோறு ஊட்டாமல்- இனி
நிலாவிற்கு சென்று ஊட்டிடுவாய்!
செவ்வாய் தோசமாய் எண்ணாமல் - நீ
செவ்வாயில் சுயமியில் சிரித்திடுவாய்!

📕📗📘📙📒📔📕📘📙📙📔📓📒

நன்றி நவில்தல்
***************
ஒத்த கருத்துடையோர்
ஒருங்கிணைந்த சபையினிலே
மெத்த படிக்காத
அறிவிலியென் கவிதையினை
அரங்கேற்றம் செய்வதற்கு
அனுமதித்த அனைவரையும்
மனம் மொழி மெய்களாலே
மனதார நன்றி சொல்லி
மகிழ்வோடு வணங்குகிறேன்!
மலர்தூவி வாழ்த்துகின்றேன்!

🌺🌹🌷💐🌸🌼🌻🌼🌸🌹🍁🌹💐

நன்றி! நன்றி!!

🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏🙏

No comments: