27/05/2018

செய்ந்நன்றி


தேரோட்டி மகனுக்கு
வில்போட்டி எதற்கென்று- பலர்
சொல்கூட்டி இகழ்ந்தபோதும்;
கோத்தகுதி இல்லையென்றும்
குலத்தகுதி இல்லையென்றும்- சிலர்
களம்நுழைய தடுத்தபோதும்;

கர்ணனை நண்பனென்றும்
அங்கதேச அரசனென்றும்
அன்போடு நாடளித்தே
அகம் மகிழ்ந்தான் துரியோதனன்!

காலத்தினால் அவன் செய்த
ஞாலத்தின் பேருதவி
அதுவென்றே எண்ணியெண்ணி
அவனோடு பயணித்து
செஞ்சோற்றுக் கடன் தீர்த்தே
செங்கதிரோன் மகன் இறந்தான்!

செய்ந்நன்றி செய்ததிலே
அவனுக்கினை யாருமுண்டோ?!!

No comments: