15/10/2017

புகைப்படக் கலைஞன்




 புகைப்படக் கலைஞனின் தவிப்பு-அது
புரிந்தால் அடைவீர் வியப்பு!
மூளையில் உதிப்பதை செதுக்கி-அவன்
முயற்சியால் தந்திடும் சிற்பி!

கண்களால் கணங்களை ரசித்து-அவன்
காட்சியாய் படைத்திடும் கவிஞன்!
ஓடிடும் நேரத்தை நிறுத்தி- அவன்
ஒளியால் வரைந்திடும் ஓவியன்!

புதுப்புது சோதனை புரிந்தே- அவன்
புதியதைத் தந்திடும் விஞ்ஞானி!
தவமெனத் தனியாய்க் கிடந்தே- அவன்
தருணத்தைப் பிடித்திடும் மெய்ஞானி!

—�செ. இராசா—�

புகைப்பட உதவி: நன்றி Mr. Riaz Ahamed

1 comment:

agaramamuthan said...

அருமை அருமை