29/10/2017

புரிதல் / அணுவை அறிவோம்


விருட்சங்களின் அம்சமெல்லாம்
விதைகளுக்குள் ஒளிந்திருக்கும்!
உயிர்களின் அம்சமெல்லாம்
உயிரணுக்குள் பொதிந்திருக்கும்!
விதை உயிர் ஆவதெல்லாம்
கருமையம் சார்ந்திருக்கும்!

பானை சோற்றின் பதம்பார்க்க
பருக்கை சோறு ஒன்றுபோதும்!
அக்னியை வளர்ப்பதற்கு
அக்னியின் பொறிபோதும்!
நீர்நிலையின் குணமறிய
நீர்த்துளிகள் சிலபோதும்!

சிறுதுளிகள் கூட்டுசேர்ந்து
பெருவெள்ளம் ஆவதுபோல்
சிறுஅணுக்கள் கூட்டுசேர்ந்து
பெருஅண்டம் ஆவதாலே
அணுக்களைப் புரிந்துகொண்டால்
ஆனதெல்லாம் விளங்கிவிடும்!

No comments: