29/10/2017

கொசு


இவனெல்லாம் கொசுவென்று
இனியென்றும் சொல்லாதீர்!
ஏளனத்தின் பொருளென்று
ஏமாந்து போகாதீர்!

கொலையாளி என்பதற்கும்
பகையாளி என்பதற்கும்
கொசுவென்று சொன்னாலே போதும்!

கொடுங்கோலன் செயல்களுக்கும்
கொசுசெய்யும் செயல்களுக்கும்
கொலையென்ற ஒருசொல்லே போதும்!

உதிரத்தை எடுப்பதிலும்
உயிர்வதைகள் செய்வதிலும்
அரசோடு கொசுவந்து மோதும்!

கொலை செய்யாக் கொசுவாலும்
கொசு செய்யும் கொலையாலும்
அரசுக்கே அவமானம் சேரும்!

No comments: