08/10/2017

சமூகத்தின் பிரிவுகள்


வருணாசிரம தர்மத்தினை
வகுத்தது சரியென்றும்
வகுத்தவை தவறென்றும்
வாதிடும் நண்பர்களே....

வாதங்கள் வைக்கும் முன்
வகுப்புகள் தோன்றியதன்
காரணம் அறிந்திடுவீர்!
உண்மையை உணர்ந்திடுவீர்!

சமூக நிர்வாகத்தில்
சகநிலை மனிதர்களை
செய்தொழில் வகையறிந்து
நான்காய் வகுத்தனரே..

உற்பத்தி சூத்திரத்தால்
பொருள் ஈட்டும் அனைவரையும்
உற்பத்தியாளர் (சூத்திரர்) என்றேதான்
முதல் பிரிவை வகுத்தனரே!

உருவான பொருள்களெல்லாம்
தேங்காமல் பகிர்ந்தளிக்க
வாணிபர் (வைசியர்) தேவை என்றே
இரண்டாம் பிரிவை வகுத்தனரே

சிலபல வாணிபரால்
சமூகத்தில் குழப்பம்வர
மேலாளர் (சத்திரியர்) தேவை என்றே
மூன்றாம் பிரிவை வகுத்தனரே

அத்தனைத் துறைகளிலும்
அறிவியல் புதுமை சொல்ல
கல்வியாளர் (அந்தணர்) தேவை என்றே
நான்காம் பிரிவை வகுத்தனரே

சகலரின் நன்மைக்காய்
சமூகத்தின் தேவைக்காய்
வருணாசிரம வகுப்புகளை
வகுத்திட்ட சான்றோர்களின்
நோக்கங்கள் உயர்வாகும்!

ஆனாலும்... அவை பின்னர்
சாதியமாய் மாறியதே
சமூகத்தின் அவலமாகும்!

—�- செ. இராசா—�—

No comments: