08/10/2017

என்னவளின் சமையல்



என்னவளின் பாச நேசம்
அவள்வைக்கும் குழம்பே பேசும்!
கருவாட்டுக் குழம்புகூட
கற்பூர மணமாய் வீசும்!
இல்லை... இல்லை...
என்னவளின் மனம்போல் வீசும்!

காய்கறிக் குழம்பு வைத்தால்
காதலின் ரசமாய் மாறும்!
கடல்மீன் குழம்பு வைத்தால்
கண்மாய்மீன் ருசியாய் மாறும்
இல்லை... இல்லை...
என்னவளின் மனமாய் மாறும்!

பிரியாணி அவள் சமைத்தால்- பிறர்
பிரியாணி மறந்தே போகும்!
பலகாரம் அவள் செய்தால்
பலகாலம் ஊரே பேசும்!
இல்லை....இல்லை
படுத்துவதாய் என்னையே ஏசும்!

---செ. இராசா----

No comments: