08/10/2017

என்னவளே அடி என்னவளே


என்னவளே அடி என்னவளே
என்விழிப் பாவையில் பதிந்தவளே...
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்விழி கண்ணீரில் புதைகிறதே...

என்னவளே அடி என்னவளே
என்இருதய அறையினில் நுழைந்தவளே..
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்இருதயம் அதிர்ச்சியில் துடிக்கிறதே...

என்னவளே அடி என்னவளே
என்உதிரத்தில் உதிரமாய் கலந்தவளே..
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்உதிரம் தனலாய் தகிக்கிறதே..

என்னவளே அடி என்னவளே
என்சுவாசத்தின் காற்றாய் இருப்பவளே
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்சுவாசத்தின் காற்றும் சுடுகிறதே...

என்னவளே அடி என்னவளே
என்னுள் உயிராய் உறைபவளே
என்னடி ஆனது என்னுள்ளே?!
என்னுயிர் என்னையே வதைக்கிறதே..

No comments: