28/02/2017



அம்மாச்சி என்றாலே! என்
அகக்காட்சி விரியுதம்மா!
அவர்காட்சி தெரியுதம்மா!
அன்புமாட்சி மலருதம்மா!

நீர்வீழ்ச்சி போல்அன்பை
நேர்பாய்ச்சி எம்நெஞ்சில்
அரசாட்சி புரிகின்றார்!
அதன்சாட்சி என்னெஞ்சே!

இருள்காட்சி வந்துவிட்டால்
இடர்வீழ்ச்சி ஆகவேண்டி
அம்மாச்சி குரல்கேட்பேன்
அகமகிழ்ச்சி ஆகிடுவேன்

மனத்தளர்ச்சி போகவச்ச
மதிகுளிர்ச்சி ஆகவச்ச
இறைஆச்சி இவர்தான்னு!
மனசாட்சி பேசுதம்மா!

No comments: