12/03/2017

பொருள் ஈட்டும் வழி:




பொருளை உலகில் தேடித்தான்
பொழுதும் நாளும் தேய்கிறது....

பணமும் காசும் சேர்த்திடவே
பயணம் தினமும் தொடர்கிறது....

களவும் பொய்யும் தவிர்த்தோர்க்கும்
கடனும் வறுமையும் வதைக்கிறது...

உயர்வின் உச்சியை அடைந்திடவே
உழைக்கா வர்க்கமும் துடிக்கிறது...

உண்மை நேர்மை கொண்டவர்க்கே
உலகில் சோதனை தொடர்கிறது...

உயர்வும் தாழ்வும் வந்தாலும்
உள்ளம் வளைந்திடக் கூடாது...

தேவைகள் நம்மில் குறையாமல்
தேடிடும் இன்பம் கிடைக்காது...

தேடிய யாவும் கிடைத்தாலும்
தெய்வம் மறந்தால் நிலைக்காது....

தர்மத்தின் வழியில் வாழ்ந்தேநாம்
தரணியில் பொருளை ஈட்டிடுவோம்....

No comments: