06/02/2017

எங்கே தொலைத்தேன் என் இதயம்?


எங்கே தொலைத்தேன் என் இதயம்?
************************************
வளைந்த புருவத்திலா?
வட்ட முகமதிலா?

உருட்டும் விழிகளிலா?
உதிரும் புன்னகையிலா?

பஞ்சுக் கன்னத்திலா?
படுத்தும் கோபத்திலா?

செவ்விதழ் வார்த்தையிலா?
செறுமும் குரல்களிலா?

கொழு கொழு தேகத்திலா?
கொப்பளிக்கும் சீற்றத்திலா?

எங்கே தொலைத்தேன்
என் இதயம்?

தொலைத்த இடமது தெரியாமல்
தெரிந்தே உழல்கிறேன் உன்னாலே!

ஈருயிர் ஓருயிர் ஆனபின்னே
ஈரநெஞ்சும் அதில் சேர்ந்திடுச்சோ?

இதயம் ஒன்றாய் ஆனபின்னே
இனிநீ என்பது நான்தானே!

இனிமேல் நானும் புகழ்ந்தாலே!
இதுதற்புகழ் தானெனத் தோன்றாதோ?!

No comments: