02/02/2017

கவியோடு நான்பாட உதித்த நல்உறவுகளே-------இனேஷ்-அணுஶ்ரீ

 
கவியோடு நான்பாட
களிப்போடு விளையாட
உயிராக மெய்யாக
உதித்த நல்உறவுகளே

அறிவாலேஉயர்ந்தாலே!
அடைவீரே! ஆனந்தமே!

அப்பா அன்றழைக்க
ஆண்மகவாய் வந்தவனே!

"இனேஷ்"

இரண்டொரு எழுத்தினுள்ளே
இருந்திட வேண்டுமென்றும்
விஷ்ணுவின் நாமமாக
வீற்றிட வேண்டுமென்றும்
இந்திய நாமமாக
இருந்திட வேண்டுமென்றும்
எண்ணிய எண்ணத்தாலே
தோன்றிய நாமம் ஐயா! நீ
தெரிந்திட வேண்டும் ஐயா!

அன்புத்தேன் அளித்திடவே!
ஆடிவந்த பெண்மகவே!

"அணுஶ்ரீ"

ஆதிமுதல் அந்தம்வரை
ஆனதெல்லாம் அணுவாலே!
ஆண்டவனின் இருப்பாக
அணுவையாம் கண்டதாலே!
ஆசையோடு பெயர்வைத்தோம்
அலைமகள் நாமத்தோடே!
அழகான உன்நாமம்
அதுவே நின்திருநாமம்

No comments: