11/02/2017

நட்பால் இணைவோம்




அன்பை விதையாய்த் தூவித்தான்
நட்பை மரமாய் வளர்த்தோமே!

கற்பைப் போலே போற்றித்தான்
நட்பை நாமும் மதித்தோமே!

காயாய் புளித்த தேர்வுகள்!
கனியாய் இனிக்கும் நினைவுகள்!

எல்லாம் கடந்த காலங்கள்!
என்றும் ஜொலிக்கும் வைரங்கள்!

இலையுதிர் காலம் வந்தாலே
இலைதான் உதிரும் தன்னாலே!

உதிர்ந்த இலைபோல் பிரிந்தாலும்
உதிரம் உறவாய் ஒன்றானோம்!

புதிதாய் துளிர்த்த இலைபோலே
புதையல் நினைவுகள் வருகுதிங்கே!

வசந்த காலம் வருவதைப்போல்
வருடம் ஒருநாள் கூடிடுவோம்!

காலம் தூரம் மறைந்திடவே
நாமும் நட்பால் இணைந்திடுவோம்!

No comments: