01/02/2017

நரேன் பிறந்த நாள் வாழ்த்து


இந்திரன் கலை ஓவியமே- நீ
இனிதே வந்த காவியமே

இதயம் கவர்ந்த பாலகனே- நீ
இருப்பாய் என்றும் நலமுடனே

கட்டத்தேவர் ஐயா பரம்பரையில்- நீ
கடவுள் அருளால் வந்தவனே

தங்கராஜ் ஐயா வழியினிலே- நீ
தர்மம் காத்திடப் பிறந்தவனே

பெற்றோர் அருளால் இப்பூமியிலே- நீ
பெற்றாய் நாமம் நரேந்திரா

புனிதர் பெயரைப் பெற்றவனே- நீ
புகழையும் அவர்போல் பெற்றிடுவாய்

அகிலம் உன்னை போற்றிடவே- நீ
அறிவை நீயும் வளர்த்திடுவாய்

சரித்திரம் போற்ற வாழ்ந்திடவே- நீ
சாதனை பல புரிந்திடுவாய்

கருணைக் கடலாய் இருந்திடவே- நீ
கடவுள் அருளைப் பெற்றிடுவாய்

இனேஷ் ராஜா மித்திரனாய்- நீ
இருப்பாய் என்றும் நிச்சயமாய்
 
வாழ்க  வாழ்க வாழியவே- நீ
தமிழ்போல் நிலைத்து வாழியவே!

வாழ்க  வாழ்க வாழியவே- நீ
தமிழ்போல் நிலைத்து வாழியவே!

No comments: