27/02/2017

எண்ணுக்கும் இறைக்கும் எல்லையில்லை

மெய்வழி அறிதல் ஞானமாகும்
மெய்யாய் உணர்தல் பக்தியாகும்
மெய்யை சரியாய் உணராதோர்
மெய்யை பொய்யென உரைப்பாரே!

பாதை தெளிவாய்த் தெரிந்தாலும்
படித்தது நன்றாய் புரிந்தாலும்
பயணம் தன்னுள் தொடங்காமல்
பக்தியை உணர்ந்தவர் உள்ளனரோ?

ஆயிரம் விடயங்கள் அறிந்தாலும்
ஆயிரம் ஆலயம் சென்றாலும்
ஆண்டவன் அருளை அடையாமல்
ஆதியும் அந்தமும் விளங்கிடுமோ?

அறிவியல் அடிப்படை கணிதமாகும்
அவற்றின் அடிப்படை எண்களாகும்
இறுதிஎண் என்பதே இல்லாமல்
இறைவனும் எண்போல் முடிவிலியே!!


✍️செ. இராசமாணிக்கம்

No comments: