29/05/2023

மௌனம் பேசியதே...

 #மௌனம்_பேசியதே

மௌனம் பேசுமா?
ஏன் பேசாது...

காதலில் பூக்கும்
மெளனப் புன்னகையில் தான்
எத்தனை வார்த்தைகள்?!!

ஊடலில் தூற்றும்
மௌனப் பார்வையில் தான்
எத்தனை மிரட்டல்கள்?!

கூடலில் கோர்க்கும்
மௌனக் கைகலப்பில்தான்
எத்தனை நேசங்கள்?!!

மழலையாய் மாறும்
மௌனக் கொஞ்சலில்தான்
எத்தனை துள்ளல்கள்?!

மகிழ்ச்சியில் உதிரும்
மௌனக் கண்ணீரில்தான்
எத்தனை அர்த்தங்கள்?

இப்படி...
ஒவ்வொரு மௌனத்திலும்தான்
எத்தனை இன்பங்கள்?!
எனில் மௌனம் பேசும் தானே...?!!

✍️செ. இராசா

No comments: