19/05/2023

கிழங்கான் மீனுவச்சு


 

கிழங்கான் மீனுவச்சு
கேட்காமத் தந்தவளே...
ஆத்தாடி என்ன சொல்ல
அடிமனசும் துள்ளுதடி
........அடிமனசும் துள்ளுதடி!
 
நாட்டுக்கோழி நீ சமைச்சா
நாக்கடியில் வெள்ளமடி
காத்தாடி போல நெஞ்சு
கடபுடன்னு துடிக்குதடி
...........கடபுடன்னு துடிக்குதடி 
 
என்னாடி என்னவளே
எனக்காகப் பிறந்தவளே
உன்னைப்போல யாரு புள்ள?
உண்மையில யாருமில்லை‌..
 
✍️செ. இராசா

No comments: