11/05/2023

 #அம்மாபாடல்முருகா

பல்லவி

யம்மோ....யம்மோ...யம்மோ....யம்மோ

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

என்னனு சொல்லுவேன்
எப்படிநான் சொல்லுவேன்
என்னைப் பெத்த தாயே உன்னை
எப்படிநான் சொல்லுவேன்.,...

இருந்தன்னு சொல்லுவனோ
இழந்தேன்னு சொல்லுவனோ
இருக்கன்னு சொல்லுவனோ
இல்லைன்னு சொல்லுவனோ..

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

சரணம்_1
கிள்ளிப் போட்ட சாம்பார சோற்றிலூற்றிக் கொடுப்பாயே..
தட்டிவிட்டுப் போனாக்க தனியாகத் தவிப்பாயே...
வெய்யயில நின்னாலே கொதிச்சுத்தான் போவாயே...
சீக்கிரமா ஓடிவந்து சேலைக்கொடை பிடிப்பாயே...

பார்த்துப் பார்த்துதான்
நீயும் வளர்த்த
பாசமில்லையே பாவிஎனக்கு
சேர்த்து சேர்த்துதான்
நீயும் கொடுத்த
தாங்க வில்லையே பாரம் எனக்கு

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

சரணம்_2
கண்ணைக் கட்டி விட்டது போல் என்னைவிட்டுப் போனாயே
உண்மைசொல்லு எப்படிநான்
உசுரவிட்டு வாழ்ந்திடுவேன்...
அப்பனென்ற வார்த்தைக்கும்
அர்த்தமாகி நின்னாயே...
இப்ப என்ன சொல்லிடுவேன்
ஏதுமின்றி நிக்கிறேனே.....(நிக்கேனே)

இரத்தம் சிந்தி தான்
நீயும் வளர்த்த
ஈரமில்லையே நெஞ்சில் எனக்கு
என்னை மட்டும்தான்
நீயும் நினைச்ச
எண்ணவில்லையே இந்தக் கிறுக்கு

யம்மா நீ யம்மா நீ
யம்மா இல்லை சாமி நீ...
ஏம்மா நீ என்னைவிட்டுத்
தனியாக போன நீ...

No comments: