07/05/2023

இன்றைய நாள் எம் வாழ்வில்

 








இன்றைய நாள் எம் வாழ்வில், சென்னை பயணத்தில் மிக முக்கியமான நாளாக அமைந்தது. காரணம், இன்று நிறையவே முக்கியமான இடங்களுக்குப் போய்வந்தோம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா...
 
அண்ணாநகரில் உள்ள ஐயப்பன் கோவில் என்பது ஒரு தனியார் கோவிலே. இங்கே சபரிமலை ஐயப்பன் கோவில் செல்ல முடியாதவர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றார்கள். அப்படியே கேரள அமைப்பை ஒத்திருப்பது இக்கோவிலின் கூடுதல் சிறப்பு.
 
2. #மயிலாப்பூர்_கபாலீஸ்வரர்_கோவில் (சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோவில்)
மிகப் பழமையான சிவத்தளமான இக்கோவில் அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட மிகவும் தொன்மையான தளமாகும். இங்கேயும் அதிஅற்புதமான வழிபாடு கிடைத்தது. தரிசனம் முடித்தபின் புகழ்பெற்ற #அக்கா_அடைக்கடையில் காலைச் சாப்பாடு முடித்தோம். ஆகா...என்னே சுவை.
 
ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரான ராமகிருஷ்ணானந்தரால் 1907ல் தொடங்கப்பட்ட கோவில் இது. என்னை ஆன்மீகப் பாதைக்கு 2001ல் அழைத்து வந்த இடமெனச் சொல்லலாம். எத்தனை மதங்களோ அத்தனை பாதைகள் என்று கூறும் சமரச சன்மார்க்க கருத்தை உள்ளடக்கிய ஓர் உன்னதத் தளம். இங்கே சிறிது நேரம் தியானம் செய்துவிட்டே கிளம்பினோம்.
 
இந்தக் கோவில் வந்தால் கண்டிப்பாக பக்தியோடு சேர்த்து வயிறும் நிரம்பும். இம்முறை ஏற்கனவே வயிறு நிரம்பி இருந்தாலும், மீண்டும் ஒரு சிறு இடம் இருந்ததால் அங்கே கிடைத்த
அருமையான
பொங்கலையும் தள்ளு தள்ளென்று தள்ளினோம். நண்பனின் கட்டிட வேலையும் இதே கோவிலில் நடப்பதால் இக்கோவில் விஜயம் கூடுதல் சிறப்பென்றே சொல்லலாம்.
 
#கோவில் (இதுவும் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோவில்)
வைணவத் தளங்களில் 108 முக்கிய திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இங்கே உள்ள கிருஷ்ணருக்கு மீசை இருந்தது வித்தியாசமாக இருந்தது. அற்புதமான தரிசனம். இங்கேதான் கோவில் யானை ஒன்று பாரதியை தாக்கியதாம். அதேபோல் யானை ஏதும் இன்று தென்படவில்லை. தப்பிச்சோம்.... ஆனால் நம்மதான் பாரதி இல்லையே...
 
ஆகா...ஆகா... எவ்வளவு அற்புதமான இடம். 2001 அல்லது 2002 வாக்கில் போயிருந்தேன். வரலாற்றில் ஐஸ்ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட கட்டிடம் இது. இங்கேதான் வெள்ளையர்கள் ஆடம்பரமாக மது பானங்களோடு ஐஸ்போட்டு சாப்பிட தங்கள் நாட்டில் இருந்து ஐஸ் கட்டிகளை வரவழைத்தார்களாம். (எவ்வளவு கொழுப்பு?) இங்கே உள்ள அறையில் 1897ல் விவேகானந்தர் தங்கியுள்ளார். அதே அறையில் மீண்டும் தியானம் செய்யும் வாய்ப்பு கிட்டியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அதைவிட முக்கியம் தற்போது நிறையவே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மூன்று வகையான திரையரங்குகளில் (VR, 4D, 3D) என்று மிகவும் அழகாக யார் விவேகானந்தரென இளைஞர்கள் அறியும் வண்ணம் அமைத்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
 
எக்மோரில் உள்ள சென்னை அருங்காட்சியகம் என்பதை நான் குறைத்து எடைபோட்டுவிட்டேன். அதாவது ஒருமணி நேரம் போதுமென்று எண்ணிவிட்டேன். அடேங்கப்பா....மூன்று மணிநேரம் நடந்தாலும் முடியவே இல்லை. (அட போங்கப்பா) அவ்வளவு இருக்கிறது உள்ளே.... எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லுவார்... கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றென்று. உண்மைதான்.... . கற்சிலை, வெண்கலச்சிலையென்று எவ்வளவோ சிலைகள்... அவ்வளவும் காலத்தை ஏந்தி நிற்கும் பொக்கிஷங்கள். அதைப்பற்றியே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
 
அத்தனை இடங்களையும் சுற்றிக்காட்டிய நண்பன் AP. செந்தில் குமாருக்கு எம் இனிய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
✍️செ. இராசா

No comments: