05/05/2023

தேடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா

 #கூடுதல்_வரிகளுடன்
தேடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா
தேவை உனக்கில்லையோ..
பாடிக் களைத்துவிட்டேன் கண்ணம்மா
பார்வை உனக்கில்லையோ..

நேற்று கதைக்கயிலே கண்ணம்மா
நெஞ்சம் குளிர்ந்ததடி..
காற்றுப் புயல்மழையோ கண்ணம்மா
கண்கள் நனைந்ததடி..

என்ன தவறிழைத்தேன் கண்ணம்மா
என்னைத் துறந்தனையோ...
அன்பின் பிழைபொறுத்தே கண்ணம்மா
அள்ளித் தழுவாயோ...

தென்றல் பொசுக்கிடுமோ கண்ணம்மா
தேகம் எரியுதடி.‌‌
என்ன கொடுமையிதோ கண்ணம்மா
எல்லாம் கசக்குதடி..

காலம் கடந்தபின்னே கண்ணம்மா
காட்சி தெரியுதடி....
ஞாலம் இதுதானோ கண்ணம்மா
ஞானம் கிடைத்ததடி...

✍️செ. இராசா

No comments: