26/03/2023

நம்மிடம் உள்ளவற்றை நாம் கொடுத்தால்

நம்மிடம் உள்ளவற்றை நாம் கொடுத்தால் நமக்குத் தேவையானதைப் பிறர் கொடுப்பார்கள் என்பதற்கு சாட்சியாக ஓர் நிகழ்வு இன்று நடந்தது. நான் பயன்படுத்திய நிறைய இசைக்கருவிகளை என் இசை நண்பர் ஒருவருக்கு என் ஞாபகார்த்தமாக கொடுத்தேன். ஆனால் எனக்கோ என் மற்றொரு நண்பர் ஊரிலிருந்து பறை இசைக்கருவியை வரவைத்து அவர் ஞாபகார்த்தமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். உண்மையில் பறையை முதன் முதலில் வாங்கி இன்றுதான் தொட்டேன். வாங்கிய உடனேயே வாசித்தேன். எமக்கு இதுவரையிலும் அதுபற்றிய முறையான பயிற்சி கிடையாது. இனிமேல்தான் போகவேண்டும்....ஆகவே மக்களே தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
 
அப்புறம் அந்த நண்பர் வேறு யாருமில்லை எங்கள் பக்கத்து மாவட்டமான இராமநாதபுரத்தைச் சேர்ந்த Viji Selvam தான். (ஒரு காலத்தில் சிவகங்கை மாவட்டமும் இராமநாதபுரம் மாவட்டம்தானே)
நன்றி நண்பரே....

 

No comments: