14/03/2023

வாராக்கடன் வந்ததுபோல வந்தவளே..

வாராக்கடன் வந்ததுபோல வந்தவளே..
வந்தவளே- என்
தீராவலி தீர்ந்ததடி என்னவளே- அடியே என்னவளே

எத்தனை நாள் காத்திருந்தேன்...
இத்தனை நாள் எங்கிருந்த?
ஒத்தையில நிக்கயில என்னவளே
உன்னைப் பத்தி புரிஞ்சதடி உண்மையிலே...

நான்....
சின்னச் சின்னத் தப்புக்காக செஞ்சதெல்லாம் கொஞ்சமில்லை
முன்னப் பின்னப் பார்த்திடாம
முட்டிக்கிட்டோம் என்ன சொல்ல...

அத்தனையும் தப்புதான்டி என்னவளே..
அம்புட்டையும் மறந்திடுவாம் உண்மையிலே...

✍️செ. இராசா

(வாராக்கடன் வந்தால் வரும் மகிழ்ச்சியின் அளவில் ஒரு பாடல் பிறந்தது உறவுகளே....எப்படி இருக்குன்னு சொல்லுங்கள்...)

No comments: