01/03/2023

எண்ணாத நாளில்லை ஏங்காத பொழுதில்லை

 


எண்ணாத நாளில்லை ஏங்காத பொழுதில்லை
வந்தோடி வா இறைவா....
பண்ணாத பாட்டில்லை பாடாத பொருளில்லை
என்னாவி நீ அல்லவா...

ஓடாத ஊரில்லை தேடாத இடமில்லை
ஓடோடி வா இறைவா..
நாடாத நகரில்லை வாடாத கணமில்லை
என்னாவி நீ கொள்ளவா..‌

ஐயா நீ ‌‌.....அப்பா நீ....யார் இறைவா?
மெய்யா நீ...பொய்யா நீ சொல் இறைவா..
கண்ணா நீ...மன்னா நீ..யார் இறைவா?
விண்ணா நீ‌‌..மண்ணா நீ....சொல் இறைவா...
வேரா நீ....வேறா நீ...யார் இறைவா?
பாரா நீ...உண்டா நீ...சொல் இறைவா...
நீரா நீ....தீயா நீ‌....யார் இறைவா?
நேரா நீ...வாயா நீ...சொல் இறைவா..

✍️செ. இராசா

No comments: