02/03/2023

போலி பட்டமளிப்பு விழா

 




நேற்று நடந்த போலி பட்டமளிப்பு விழாபோல் பல கூத்துகள் இம்மண்ணில் தொடர்ந்து நடைபெறுகின்றன. நல்லவேளை நேற்றைய நிகழ்வுபற்றி அண்ணா பல்கலைக்கழகமே அறிவிப்பு வெளியிட்டதால் வெளியே தெரிந்தது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இங்கே யாருக்கும் விழிப்புணர்வே இல்லை என்பதே....
இந்தப் போலி பட்டம் அளிப்பு விழாவில் கலந்து கொண்ட நபர்களைப் பாருங்களேன்...
 
ஈரோடு_மகேஷ் (வாய்கிழியப் பேசுனா போதாது)
யூடியுபர்_கோபி (பரிதாபங்கள் கோபிதான்)
 
இதில் நம்ம வராத வைகைப்புயலுக்கு வீடுதேடி பட்டம் வழங்கியுள்ளார்கள். என்னே பெருந்தன்மை?!.....
 
இதுபோல் பட்டமளிப்பு விழாக்கள் நிறையவே நடக்கிறது.
இதில் ஏமாறுபவர்கள் எல்லாம் பிரபலங்கள்.
ஏமாற்றுபவர்கள் எல்லாம் சதுரங்க வேட்டையை மிஞ்சிய சாணக்கியர்கள்.
நடத்திய இடம் அண்ணா பல்கலைக்கழகம், வந்து வழங்கியவர் ஓய்வுபெற்ற நீதிபதி...ம்ம்... எப்பூடி....
இதேபோல் முனைவர்_பட்டங்கள் குழும விருதுகள் வேறு....ஐயோ சாமி முடியல...
 
வாரா வாரம் கொடுக்கும் குழும விருதுகளைப் பற்றி பல முறை கூறியும் யாரும் திருந்துவதாகவே இல்லை‌.... ஒவ்வொரு கவி ஆளுமை பேரிலும் 50 நபர்களுக்கு விருதுகள்....யார்யா நீங்கள்லாம்?
ஆனால் ஒன்னு....இங்கே..புகழ் விரும்பிகள் இருக்கும்வரை....இந்த மாதிரி கல்லா கட்டும் ஆசாமிகள் சதுரங்க வேட்டைகளை நடத்தத்தான் செய்வார்கள்.
 
✍️செ. இராசா

No comments: