19/03/2023

வெற்றி என்ற ஒன்றைத்தேடி

 

வெற்றி என்ற ஒன்றைத்தேடி
.....ஓடுகின்றேன்!
சுற்றி உள்ள சூழல்நாடித்
.....தேடுகின்றேன்!
கற்றுக் கொண்ட வித்தைதானே
......காட்டுகின்றேன்!
பற்று கொண்ட பக்தைபோலே
.....பாடுகின்றேன்!
 
 
நாளை நாளை என்று சொல்லி நாளைக் கடத்த வேணாம்...
நாளை என்ன நாளை... இன்றே நாளைத் தொடங்க வேணும்‌
காலை மாலை என்று சொல்லி
காலங் கடத்த வேணாம்...
 
வேலை செய்யும் வேளை வந்தா வேலை தொடங்க வேணும்
காத்திருக்கிற நேரத்துல கவுத்திடுவான்டா...
காலவைக்கிற ஓரத்துல நுழைஞ்சிடுவான்டா...
பாத்துநிக்கிற நேரத்துல புகுந்திடுவான்டா...
பார்த்துவைக்கிற பாகத்துல படுத்துடுவான்டா...
 
தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ‌..
அறிஞ்சுக்கோ தெளிஞ்சுக்கோ
அறிஞ்சு தெளிஞ்சு ஜெயிச்சுக்கோ...
 
✍️செ. இராசா

No comments: