15/03/2020

கொரானாக் குறள்--அந்தாதி



யாராய் இருந்தாலும் எட்டியே கைகூப்ப
வாராது நோய்கள் வணங்கு
(1)

வணங்குதல் என்பதை வாழ்த்துதல் என்றே
உணர்ந்தால் விரியும் உலகு
(2)

உலகம் முழுதும் உலவிடும் நோயை
விலக்கிட வேண்டும் விழி
(3)

விழிப்பாய் இருந்து விரைவில் திரும்பும்
வழியினைக் கண்டிட வா
(4)

வாயினில் ஒன்றினை வைத்திடும் போதினில்
நோயின் வலியை நினை
(5)

நினைவுடன் கைகளை நீரில் கழுவி
தனைவரும் நோயைத் தடு
(6)

தடுப்பு முறையால் தடுத்திட உந்தன்
உடுப்பில் சுடுநீரை ஊற்று
(7)

ஊற்றிக் குடிக்கிற ஓர்ரசம் போதுமே
வேற்று மருந்தேன் விடு
(8)

விடுகதை நோய்க்கு விடையினைத் தந்தே
இடுக்கண் களைவது யார்?!
(9)

No comments: