18/03/2020

#நான் ஓர் வெங்காயம்


நான் யார் என்று
நானேக் கேட்க
லூசா என்றார்
அன்புத் தாயார்

அதே கேள்வியை
அடிக்கடிக் கேட்க
நீண்ட முச்சைப்
பதிலாய்த் தந்தார்

அட நான்தான் யார்?

சுத்த புத்தி சித்தனா? இல்லை
செத்த புத்தி பித்தனா?
மலரா புத்தி மழலையா? இல்லை
மலர்ந்த புத்தி மடையனா?

ஆமாம் நான் யார்?!

வினா என்னுள் விடைதேடி
அனாதைபோல் அல்லாட
ஆதரவுக் கரம் தேடி
ஆழ்மனம் ஓடியது

ஞாலத்தின் ஞானத்தை
நூலகத்தில் தேடுகையில்
எண்ணற்ற குருமார்கள்
எண்ணத்தீ மூட்டிவிட
இருளகத்தில் ஒளி பட்டு
அருளகத்தை “நான்” கண்டேன்
உருவகத்து பொருள் பற்றி
அருவகமாய் “நான்” ஆனேன்

நான் கண்ட உண்மையினை
நான் இன்று சொல்லிடவா?!

நான் எனில் யாரென்றால்
...
....
....

#நான் ஓர் வெங்காயம்

✍️செரா

No comments: