09/03/2020

வங்கியில பணத்தைப் போட்டால்



வங்கியில பணத்தைப் போட்டால் ....திவால் திவால்!
எங்களோட வாழ்க்கை ஆச்சு....சவால் சவால்!
திட்டம் போட்டுத் திருடுறவன் ஜாலி ஜாலி
கட்டம் போட்டு வாழுறவன் காலி காலி

#சரணம்

அங்க இங்க ஓடியோடி குருவிபோல சேர்த்தோங்க
இங்க அங்க போட்டிடாமல் வங்கியில போட்டோங்க
ஆதாரம் வேணுமுன்னு ஆதார்கார்ட் கேட்டாங்க
போதாது பத்தலைன்னு பேனுகார்ட் கேட்டாங்க
எல்லாமும் தந்தபின்னே என்ன ஆச்சு?
வங்கியத்தான் காணோங்க எல்லாம் போச்சு!
...............(வங்கியிலப் பணத்தைப்)

இப்படியே போனாக்க என்ன ஆகும்?
தப்படியில் எல்லாமே மூழ்கிப் போகும்!

#வங்கி_மோசடி

✍️செ. இராசா

No comments: