13/03/2020

ஓவ்வொரு செல்களும் .........உன்பெயர் சொல்லிடும்



ஓவ்வொரு செல்களும்
.........உன்பெயர் சொல்லிடும்
ஒவ்வொரு சுவாசமும்
.........உன்னையேத் தேடிடும்
வந்திடு வந்திடு உன்னையேத் தந்திடு
கொஞ்சிடுக் கொஞ்சிடு மிஞ்சினால் கெஞ்சிடு

கண்ணனே ஓடிவா- உன்
கன்னிநான் அல்லவா?!

தடையின்றி மோதும் கடலலை போலே
விடையின்றி நீளும் வளியலை போலே
இடையின்றி ஏங்குது என்னுயிர் வாடுது
அறிவாயா?— நீ—-அறிவாயா?

உடையாய் மாறவா- என்
உயிர்மை ஏற்றவா?
கண்ணனே ஓடிவா- உன்
கன்னிநான் அல்லவா?!

மடையின்றி ஓடும் நதியினைப் போலே
படையின்றிப் பாயும் நோய் வந்ததாலே
எடையின்றிப் போனது என்னுடல் நோகுது
அறிவாயா?—-நீ—-அறிவாயா?

உடையாய் மாறவா- என்
உயிர்மை ஏற்றவா?
கண்ணனே ஓடிவா- உன்
கன்னிநான் அல்லவா?!

✍️செ. இராசா

No comments: