22/03/2020

பஞ்ச பூதங்களில் எமை அஞ்ச வைத்த அருவ பூதமே



பஞ்ச பூதங்களில் எமை
அஞ்ச வைத்த அருவ பூதமே
கெஞ்சிக் கேட்கிறோம்
கொஞ்சமேனும் கருணை காட்டு

கஜாவால் கதறினோம்
காட்டுத்தீயால் பதறினோம்
வெள்ளத்தால் மிதந்தோம்
பூகம்பத்தால் மிரண்டோம்
ஆனாலும்...
உன் உறவுகள் எல்லாம்
உனைப்போல் இல்லையே...

நீ மட்டும் ஏன்
மாயோனாய் இருந்து
மாயஜாலம் செய்கிறாய்?!
மயான அமைதி தந்து
மௌனமாக்கிவிட்டாயே...

மண்டியிட்டுக் கேட்கிறோம்
மாயமாகிவிடு...
தயாள குணம் கொண்டு
தாயாகிவிடு...

வளி வழி வந்த அரூப பூதமே
வலி ஒலி தராமல் விலகிடு
கை வழிப் பரவும் கோப பூதமே
மெய்யாய்ப் பணிகிறோம் விலகிடு

🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

No comments: