25/03/2020

புதிய விடியலுக்காய்..



என்ன நடக்கிறது?- இங்கே
என்ன நடக்கிறது?!

எத்தனையோ இடர்கள்
எத்தனையோ வலிகள்
இருந்தும்..
இப்படி ஒரு நிகழ்வு..
இதுவரைக் கண்டதில்லை

அதிகார மோதல்கள்
ஆயிரம் இழப்புகள்

அகதியாய் நகர்வுகள்
அங்கேயும் காயங்கள்

ஐயகோ
இன்னும் கேட்கிறது
அந்தத் துப்பாக்கி ஓசை

ஐயகோ
இன்னும் கேட்கிறது
அந்த மரண ஓலம்...
கனவா....இல்லை
நனவா?

இயந்திரம் மௌனிக்குமுன்
இஃதென்ன புது ஆயுதம்

ஓலம் குறையவில்லையே?!
ஓங்கி ஒலிக்கிறதே

புரிகிறது

மனிதனில் மனிதம் புக
மறைபொருள் தரும்
மருந்தா இது?!

கசப்பு மருந்துதான்
என்ன செய்ய?

காத்திருப்போம்..

#கை_கழுவுவோம்..

புதிய விடியலுக்காய்...

✍️செ. இராசா

(அன்பு நண்பர் கரீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதியது)

No comments: