16/03/2020

மருத்துவம் போலதன் மகத்துவம் புரியும்



முதல் சுவாசம்
மோதும் தருணம்
அழுகை ஒலியில்
ஆனந்தம் பிறக்கும்!

இறுதி சுவாசம்
இழுக்கும் தருணம்
மரண ஓலத்தில்
மாயை இறக்கும்!

இடைப்பட்ட சுவாசம்
நடக்கின்ற தருணம்
இதய மேளத்தில்
எல்லாம் கேட்கும்!

அமைதியாய்க் கேட்கும்
அகத்தின் தருணம்
பிறழ்கிற தாளம்
பிடிபட்டுப் போகும்!

களைவிடும் தவறைக்
களைகின்ற தருணம்
மருத்துவம் போலதன்
மகத்துவம் புரியும்!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_108

No comments: