07/03/2020

இசை என்பதுஉ யிர்மொழி



இமைக் கதவுகளின் ஓசையும்
இதய மேளத்தின் தாளமும்
நாசித் துவாரங்களின் நாதமும்
நாடி நரம்புகளின் ரீங்காரமும்
மௌன ஒலியின் பிரசங்கமும்
மனன மொழியின் மௌனமும்
இரத்த ஓடையின் கானமும்
இச்சை வேகத்தின் ராகமும்
அசையா உடலிலும் அசையும்!
இசையா(ய்) உயிரிலும் இசைக்கும்!

#இசை_என்பது_உயிர்மொழி
#இசை_என்பது_உயர்மொழி

✍️செ. இராசா

No comments: