10/02/2020

#நினைவெல்லாம்_நீ


உளி விழியால் சமர்செய்தாய்
மொழி விழியால் சம்மதித்தேன்

குறுங் கவியாய்ப் புன்னகைத்தாய்
புதுக் கவியாய் மனமுற்றேன்

உன் நெஞ்சில் நீ நினைத்தாய்
என் நெஞ்சில் நானறிந்தேன்

சொல்லிடவே எத்தனித்தாய்
சொல்லும்முன் நான் சொன்னேன்;

“நினைவெல்லாம் இருந்துவிட்டு
நிழலாகிப் போனாலும்
நிஜமாக வந்திடுவாய்...
நீ நின்று வாழ்த்திடுவாய்..”
இதுதானே..என்றுரைத்தேன்!

அப்போதும் புன்னகைத்தாய்..
ஆழ்மன வலியோடு...

✍️செ. இராசா

#நினைவெல்லாம்_நீ

No comments: