01/02/2020

எழுமின் - (தமிழ்த் தொழிலதிபர்கள் கூட்டமைப்பின் குடும்ப விழா)



சமீப காலமாக கத்தாரில் தமிழ் சார்ந்த அமைப்புகளின் கூட்டங்கள் மிக அதிக அளவில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அடையவைக்கிறது. அந்த வரிசையில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தொழிலதிபர்கள் குடும்ப விழா மிகவும் விசேஷமானது.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? என்று நினைப்பது புரிகிறது. மிகவும் சாதாரண நிலையில் இருந்து தன் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் பல கிளைகளுடன் ஆலமரமாய் பரவ விட்டு இன்று சமூகத்தில் பல தொழில் முனைவோர்க்குத் தூணாக நிற்கும் நண்பர் திரு #சக்திவேல் அவர்களின் அழைப்பின் பேரில் நானும் குடும்பத்துடன் சென்றிருந்தேன். (சமீப காலமாக அனைத்துத் தமிழ் அமைப்புகளுக்கும் அவர் அளித்து வரும் கொடை ஆதரவு மிகவும் பாராட்டுதலுக்குரியது).

நேற்றைய நிகழ்வு பற்றிய சில துளிகள்.
************************************************
1. நிகழ்வு முழுமையும் தமிழில் நடந்தது. முதலாளிகள் மாநாடு தமிழிலா? ஆம் முழுக்க முழுக்கத் தமிழில் நடந்தது.

2. அருட்தந்தை #ஜெகத்கஸ்பரின் பேச்சில் அரங்கமே அதிர்ந்தது. திருக்குறள் அறம் பற்றியும் தமிழின் பெருமையையும் சொன்ன விதம் மிகவும் அருமையாக இருந்தது.

3. உலகின் பணக்கார நாட்டு வங்கியின் CEO , #சீதாராமன் ஐயா அவர்களின் பேச்சு மற்றும் பட்டிமன்ற நடுவராக பணியாற்றிய விதமும் மிக அருமையாக இருந்தது..

4. கத்தார் மனவளக்கலைப் பேராசிரியர், பொறியாளர், சித்த மருத்துவர், ஜோதிட ஆதித்யா................என் ஆன்மீக குரு திரு முத்து ஐயா அவர்களுக்கு "#ஞானத்தென்றல்" விருது வழங்கப்பட்டது.

5. உதவிப் பொறியாளராக இருந்து மிகவும் உயர்ந்த இடமான L&T நிறுவனத்தின் கத்தார் நாட்டுத் தலைமைப் பதவி வகிக்கும் திரு. #ஆண்டனி_தனபாலன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

6. மாமாங்கம் என்கிற கலைப்பள்ளியின் நடன ஆசிரியர் மற்றும் நண்பருமான திரு .#சூசன் அவர்களுக்கும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

7. பறை முதல் பரதம் வரை அனைத்து கலை நிகழ்ச்சிகளும் தமிழ் தமிழ் என்று களைகட்டியது. குறிப்பாக நண்பர் #விஜயக்குமார் அவர்களின் மகன் மற்றும் மகள் பேசிய பேச்சில் அரங்கமே அதிர்ந்தது.

8. ஓமான் நாட்டைச்சேர்ந்த அரபியின் தமிழ்ப் பேச்சு அனைவரையும் வியக்க வைத்தது.

9. மொத்தத்தில் தமிழ் விருந்தோடு கிடைத்த இறுதி விருந்தும் இளநீரும் அனைவரின் இதயத்தையும் செல்களையும் முழுவதும் நிறைத்தது.

வாழ்க தமிழ்
வாழ்க வள்ளுவம்
வாழ்க வளமுடன்

நன்றி நன்றி

No comments: