26/02/2020

பாடல்: வெளிநாட்டில் வாழும் பிரிந்த கணவன் பாடுவதுபோல்


இம்முறை சரணம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது


#உசுரு_விட்ட_உடலுபோல
உன்னை விட்டு உழலுறேன்
என்ன சொல்லி என்ன ஆக..
என்னைநானே நோகுறேன்..
எண்ணையில்லா விளக்குபோல
எண்ணத் திரிய எரிக்கிறேன்...
கண்ணுக்குள்ள உன்னை வச்சு
கண்ணீராலே நனைக்கிறேன்..

அடியே அடியே... அடியே அடியே..
அடிமேல் அடியே..வாழ்க்கை இடியே..
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல்...கொடுமை கொடியே!

#சரணம்_1

நமது வாழ்க்கை சதிராடுது
ஏனோ இன்னும் விளையாடுது
வருகிற காலம் மட்டும் காணோம்

வருச வருசம் கடந்தோடையில்
இருக்கும் இளமை உருண்டோடையில்
கண்ணுக்குள் ஏனோ
விண்ணுக்கும் மண்ணுக்கும் கனவு போகலையே
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல் கொடுமை..யடியே

#சரணம்_2

கடவுள் செஞ்ச சதியா இது
நாம செஞ்ச வினையா இது
அடிக்கிற யோகம் மட்டும் காணோம்

வரவு நடந்து வரும் வேளையில்
செலவு பறந்து வரும் போதினில்
என்னம்மோ ஏதோ
நெஞ்சுக்கும் மூளைக்கும் அடிக்கும் அய்யய்யோ!
கொடியே கொடியே...கொடுமை கொடியே!
கொழுத்தும் வெயில்போல் கொடுமை..யடியே

✍️செ.இராசா©️®️

No comments: