01/02/2020

#ஞானத்தென்றல் விருது வாங்கிய எங்கள் குரு திரு. முத்துஐயா (Sudalai Muthu) அவர்களுக்கு பலவிகற்ப பஃறொடை வெண்பாவில் வாழ்த்து


அறிவியல் பார்வையில்
................ஆன்மீக ஞானம்!
பொறியியல் பார்வையில்
.................பௌதீக ஞானம் !
மகரிஷி பார்வையில்
.................மார்க்கத்தின் ஞானம்!
அகமுகப் பார்வையில்
.................ஆராயும் ஞானம்!
கவிஞனின் பார்வையில்
..................கற்பனை ஞானம்!
பவித்திரப் பார்வையில்
..................பஞ்சாங்க ஞானம்!
மருத்துவப் பார்வையில்
..................மாகுரு ஞானம்!

ஒருங்கே இணைந்த
.................உயர்ந்த குருவாம்
திருமகன் முத்தையா
................சீர்மை புகழ்ந்து
விருப்புடன் தந்தார் விருது!!!

“ஞானத்தென்றல்”விருது

✍️செ. இராசா

No comments: