13/02/2020

வாசகன்போல் பாருங்கள்


ஆசிரியர்போல் பார்க்காதீர்
ஆச்சரியப் படாமல்
ஆராய்ச்சி செய்வீர்!

பெற்றோர்போல் பார்க்காதீர்
பற்றினால் மட்டும்
பாராட்டி மகிழ்வீர்!

காதலர்போல் பார்க்காதீர்
கொட்டாவி விட்டாலும்
குறுங்கவி என்பீர்!

வியாபாரிபோல் பார்க்காதீர்
என்ன லாபமென்று
எப்போதும் கேட்பீர்!

விஞ்ஞானிபோல் பார்க்காதீர்
பகுத்தறியும் ஞானமென்று
பார்த்துக் கொண்டே......இருப்பீர்!

வாசகன்போல் பாருங்கள்
வாசிக்கும் வரி பொறு(ரு)த்து
வாழ்த்திடும் வள்ளலாவீர்!

✍️செ. இராசா

No comments: