24/02/2020

#தேடிட_வாராயோ_நீ


இரவியைப் பிரிந்து
இரவில் கரைந்து
எனைப்போல் தேயும் நிலவே
உனைப்போல் யாரென் துணையே?

பசலை மிகுந்து
விசமாய்ப் பரந்து
எனைப்போல் வெளிரிய நிலவே
உனைப்போல் யாரென் துணையே?

கவியில் நிறைந்து
செவியில் குளிர்ந்து
எனைப்போல் உலவும் நிலவே
உனைப்போல் யாரென் துணையே?!

மலர்ந்தால் மலர்ந்து
மலர்ந்தபின் குறைந்து
எனைப்போல் ஊடும் நிலவே
உனைப்போல் யாரென் துணையே?

#தேடிட_வாராயோ_நீ
#அவனைத்_தேடிட_வாராயோ

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_105

No comments: