29/11/2017

அம்மாவின் உலகம்


ஆயிரம்மைல் கடந்து
அயல் தேசம் வாழ்கின்ற
அன்பான தன் மகனை
அதிகாலை வேளையிலே
அம்மா அழைத்தாள்...

அழைப்பினை தடுத்துவிட்டு
அன்புமகன் அழைத்தான்...
அழைத்ததன் காரணத்தை
அம்மாவிடம் கேட்டான்.

"ஒன்றும் இல்லை ஐயா...
உன்குரலே இன்பம் ஐயா....
அழைப்புவரா  நாட்களிலே
அகிலமே இருளுதையா...
அதனாலே அழைத்தேன் ஐயா...."
..........................................
.........................................
நாலு வார்த்தை சொல்லும்போதே
நாக்கெல்லாம் பிறழ்கிறது...

அவள் அழுகைக் குரல் கேட்டு
இவன் நெஞ்சும் நனைகிறது..........


-----------செ. இராசா------

No comments: