14/11/2017

எவ்விடம்/ எவரிடம் குறை இல்லை?


வெண்மதியிலும் குறையுண்டு- சிலர்
நன்மதியிலும் குறையுண்டு!
குறையில்லா இறைவனுக்கும்- ஒரு
குறையில்லாக் குறையுண்டு!

நிறைநிலை அடைந்தவர்கள்- பிறர்
குறைகளைக் காண்பதில்லை!
குறைகுணம் உள்ளவர்கள்- பிறர்
நிறைகளைக் காண்பதில்லை!



---------------------------

சிவாவின்  பின்னூட்டம்:

குறையில்லா உன் கவியிலும் 
 ஓர் குறையுண்டு...
அழகாய் வரி அமைத்து 

அற்புதக் கருத்தைக் கூறி
சிறிதாய் இதைப் படைத்துவிட்டாயே 

எனும் பெரும் குறைதான் நண்பா..

பதில்  பின்னூட்டம்

குறைகவியைப் படைத்ததிலே- நீ
நிறையவில்லை நானறிவேன்...

நிறைகவியைப் படைக்காத
குறையொன்றே குறையென்று,
குறைபோல சொல்வதைநான்
குறையாகக் கருதவில்லை...
நிறையன்பில் என் நண்பன்
குறையாகச் சொல்வானோ?!

குறைவான இக்கவிதை
குறையில்லாக் கவிதையென்றாய்....
நிறைவான வார்த்தை கூறி
குறையாத அன்புசெய்தாய்.....

நன்றி நண்பா....
 

No comments: