25/11/2017

என்று மாறும் இந்த உலகம்?!


எங்கெங்கு காணினும் கண்ணீர் வெள்ளம்
என்றுதான் மாறுமோஆள்வோர் உள்ளம்
ஏழைகள் வாழ்விலே எங்கே இன்பம்?
ஏய்ப்பவர் ஆள்வதால் எல்லாம் துன்பம்!

வாக்குகள் மாற்றியே வாய்ப்பு தந்தோம்!
வரிசையாய் மாறிய முதல்வர் கண்டோம்!
வாய்வழி வள்ளலை வடக்கில் கண்டோம்!
வரிசையாய் வங்கிமுன் வாடி நின்றோம்!

திராவிடம் திராவிடம் என்று சொல்லி
திராவகம் வீசிய பலரைக் கண்டோம்!
தமிழினம் என்னினம் என்று சொல்லி
தமிழனைக் குத்திய தலைவர் கண்டோம்!

சமத்துவப் போதனை செய்து கொண்டே
சாதியம் வளர்த்திடும் கொடுமை கண்டோம்!
அடிக்கடி நிறங்களை மாற்றிக் கொண்டே
அறிவுரை வழங்கிடும் தலைமை கொண்டோம்!

ஆத்திகம் நாத்திகம் கூறு போடும்
ஆள்பவர் மனங்களில் மாற்றம் வேண்டும்!
கோத்திரச் சூத்திரம் போட்டுப் பார்த்தால்
ரௌத்திரப் பார்வையில் எரிக்க வேண்டும்!

—�—செ. இராசா—�—

No comments: