27/11/2017

வெண்ணிலவு சுடுவதென்ன?


பெண்ணவளைக் கண்டுவிட்டால்
கண்ணிமைக்க முடிவதில்லை!

பெண்ணவளின் குரல்கேட்டால்
எண்ணம்வேறு வருவதில்லை!

ஆமாம்....

பெண்ணிலவு அவளென்றால்
வெண்ணிலவு சுடுவதென்ன?

ஓ.....

பெண்ணவளின் அழகுகண்டு
விண்ணிலவு(ம்) எரிகிறதோ?!!

——செ. இராசா—-

No comments: