25/11/2017

நம்பிக்கை


என்ன ஆகுமய்யா?- பின்
எதற்கு கவலையய்யா?
உனக்குள் சக்தியய்யா-நீ
உள்ளதை உணருமய்யா!

சறுக்குதல் சகஜமய்யா- அதை
சகித்திடல் வேண்டுமய்யா!
வாழ்க்கை வட்டமய்யா- நீ
வாழ்ந்திடப் புரியுமய்யா!

விமர்சனம் வருமய்யா- அது
வளர்ச்சியின் உரமய்யா!
நல்லது(ம்) நடக்குமய்யா- நீ
நம்பினால் வெற்றியய்யா!

——செ. இராசா——-

No comments: