25/11/2017

10 பேருக்கு பகிர்ந்தால் நன்மையா?!


பக்தியின் பெயரால் பரப்பிவிடும்
பரப்புரைச் செய்திகள் வந்தவுடன்
படித்ததும் உடனே பதறாமல்
பகிர்ந்திடும் செயலை நிறுத்திடுவீர்!

மூலையில் எங்கோ அமர்ந்திருந்து
மூடநம்பிக்கை பரப்பிவிடும்- சில
மூடர்கள் அனுப்பிடும் செய்திகளை
மூளையில் சிறிதும் ஏற்றாதீர்!

பத்து பேருக்கு பரப்பியதும்
பற்பல நன்மைகள் வருமென்ற
பைத்திய தனத்தினை நம்பாமல்
பக்குவ பக்தியை வளர்த்திடுவீர்!

வாழ்க வளமுடன்!

——செ.இராசா—-

No comments: