25/11/2017

நமக்குள் பாரதம்


பாண்டவர் கௌரவர் போராட்டம்
பாரதக்கதைதனில் நாம் அறிவோம்!
அறிந்த கதைக்குள் பொதிந்துள்ள
அறியா விசயத்தைச் சொல்கின்றேன்!
காணொளிக் காட்சியில் நான்கேட்ட
கருத்தினை இங்கே பகிர்கின்றேன்!


பாண்டவர் ஐவர் என்பவர்கள்- நம்
புலன்கள் ஐந்தினைக் குறிப்பனவாம்!
கவுரவர் நூறு என்பவர்கள்- நம்
இச்சைகள் நூறினைக் குறிப்பனவாம்!
மனமெனும் கர்ணனின் ஆதரவோ- நம்
இச்சைகள் பின்னே நிற்கிறதாம்!

மயக்கத்தில் மனிதன் விழிப்பதற்கு- நம்
மனத்தினை வெல்வது அவசியமாம்!
இச்சையை புலன்கள் வெல்வதற்கு- நம்
இறைவனின் கருணையும் அவசியமாம்!
சிறப்பான பேச்சில் புரியவைத்த-சகோதரி
சுல்தானா பர்வீனை வணங்குகின்றேன்!

—— செ. இராசா——-

No comments: