03/12/2023

பூரி

 


வார்த்த வடிவுகண்டு
.....வாயிடுக்கில் நீரூற
கோர்த்த விரல்கூடிக்
.....கொஞ்சியுள்- சேர்க்கும்முன்
செஞ்ச மசாலாவைச்
.....செல்லமாய்த் தொட்டனுப்பப்
பஞ்சாய் பறக்கும்
.....பசி!
 
பூரியெனச் சொன்னாலோ
.......போய்விடுவேன் முன்னாலே
சாரியெனச் சொன்னாலோ
........சாஞ்சிடுவேன் தன்னாலே
செஞ்சவளும் இல்லாம
.......செஞ்சிடவும் எண்ணாம
நெஞ்சமெல்லாம் உந்தன்
....... நினைப்பு!
✍️செ.இராசா

No comments: