14/12/2023

சொர்க்கமுனா என்னவென்று

 (#பாடலின்_சூழல்:
புதிதாகத் திருமணமான கணவன் ஒரு கருத்து மோதலில் தன் மனைவியைப் பிரிந்தநிலையில் பாடுவது)

சொர்க்கமுனா என்னவென்று
சொல்லாமச் சொன்னவளே...
அர்த்தமுள்ள சொந்தமென்று
அன்பாக வந்தவளே...

என்னவென்று சொல்லிடுவேன்?
எந்தன் நெஞ்சில் எரிமலையே...
என்னவென்று தேற்றிடுவேன்
உண்மை ஏதும் புரியலையே...

துணையாக வந்தவுன்னை
துறந்துவிட நினைச்சேனே..
மனையாக வந்தவுன்னை
மறந்துவிட நினைச்சேனே

உலகம் போற போக்குலதான்
ஓடத்தெரியவில்லை...
சுழலும் வேக ஆத்துல தான்
நீந்தத்தெரியவில்லை...

ஐயம்வெரி சாரி சாரி
துப்புதிந்த உலகம் காறி...

✍️செ. இராசா

No comments: